பின்பற்றுபவர்கள்

வியாழன், 17 அக்டோபர், 2013

நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்

K பாக்கியராஜ் இந்தப் படத்தில் நடித்தப் பின் இதே படத்தின் கதாநாயகி பிரவீனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அடுத்த வருடமே பிரவீனா இறந்து போனார். மஞ்சள் காமாலையால் இறந்தார் என சொல்லப் படுகிறது. அதற்கு அடுத்த வருடமே பூர்ணிமா ஜெயராமனை திருமணம் செய்துக் கொண்டார். இந்தப் படத்திலும் பாக்கியராஜ் இரண்டு பெண்டாட்டிக் காரராக நடித்திருப்பார்!

இனிமையான இசையும் வழக்கமான இனிய குரல்களும் கொண்ட பாடல்.

திரைப்படம்: பாமா ருக்மணி(1980)
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் M S. விஸ்வநாதன்
பாடியவர்கள்: S. ஜானகி, S B. பாலசுப்ரமணியம்
நடிகர்கள்: K. பாக்யராஜ், பிரவீணா
இயக்கம்: R பாஸ்கரன்
கதை: K பாக்கியராஜ்.

 http://asoktamil.opendrive.com/files/Nl8yMjU0MzgxOV9uVFVNRF8zNGM4/Nee%20Oru%20Kodi%20Malar%20Koodi.mp3






ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹாஹாஹாஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்

கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்

உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல
உண்மையில் உன்னாலே

கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே

நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்
நீராடத் துடிக்கும் நிலை காண்பாய்

கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்
 நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்

அலைக்கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே

அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதும் அறியாயோ


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

6 கருத்துகள்:

SANKAR சொன்னது…

ஆரம்ப காலங்களில் பாக்யராஜுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் கங்கை அமரன்

SANKAR சொன்னது…

ஆரம்ப காலங்களில் பாக்யராஜுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் கங்கை அமரன்

Raashid Ahamed சொன்னது…

அப்படியா ? என்ன இருந்தாலும் மலேசியா வாசுதேவன் குரல் தான் பாக்யராஜூக்கு அப்படி ஒரு பொருத்தம். உதாரணம், புதிய வார்ப்புகள், விடியும் வரை காத்திரு, ஜெயச்சந்திரன், எஸ்பிபாலா கூட பிண்ணனி குரல் கொடுத்துள்ளனர்.

Unknown சொன்னது…

நன்றி ஷங்கர். இது எனக்கு புதிய செய்தி. இந்தப் படத்திலுமா கங்கை அமரன் அவருக்கு குரல் கொடுத்திருக்கிறார்?நன்றி ஷங்கர். இது எனக்கு புதிய செய்தி. இந்தப் படத்திலுமா கங்கை அமரன் அவருக்கு குரல் கொடுத்திருக்கிறார்?
நன்றி ராஷீத். நீங்கள் சொல்வது உண்மைதான் மலேஷியா வாசு, பாக்கியராஜுக்கு தூரல் நின்னு போச்சி என்ற படத்திலிருந்து பாடலுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தார் என நினைக்கிறேன். அதன் பிறகு நமக்கு பழக்கப் பட்டு விட்டதால் நமக்கு அந்த எண்ணமாக இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை மலேஷியா வாசு குரல் கரடு முரடான கதா பாத்திரம் கொண்ட ரஜினிக்கே சரியாக இருந்தது. மென்மையான நடிப்பு கொண்டவர்களுக்கு கொஞ்சம் முரண் தான்.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக