பின்பற்றுபவர்கள்

புதன், 30 அக்டோபர், 2013

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

அருண்மொழியின் குரலில் மீண்டும் ஒரு இனிமையான பாடல். கமலுக்கு கொஞ்சமும் ஒத்து வராத குரல். பாடலை தனியாகக் கேட்கும் பொழுது நல்ல இனிமை. மென்மையான பாடல்.

திரைப் படம்: சூர சம்ஹாரம் (1988)
நடிப்பு: கமலஹாசன், நிரோஷா
இயக்கம்:சித்ரா லக்ஷ்மணன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி,  K S சித்ரா
பாடல்: கங்கை அமரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzE1OTEwOV9Eam9FQV9jMDlm/NaanEnbathu.mp3






லா ல லா ல லா லா ல லா ல லா லா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது

பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை

கூடினேன் கொண்டாடினேன் என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன

நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது

தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண

போதும் இது போதும் இளம் பூவை மேனி தாங்குமா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

தேவலோகம் வேறு ஏது

தேவன் இங்கு உள்ள போது

வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் பிடித்த பாடல்... நன்றி...

Anand சொன்னது…

கூடினேன் "பண்பாடினேன்" என் கோலம் வேறு ஆனேன்... :)

கருத்துரையிடுக