பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ


காதல் பாடலானாலும் சற்று கனமான கவிதை வரிகள். பாடகர்கள் இலகுவாக பாடி சென்றுவிட்டார்கள்.
இந்தப் பாடல் வரிகள் எனக்கு கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்ற பொன்னெழில் பூத்தது என்ற பாடலை நினைவுபடுத்துகிறது.
இந்த இரு பாடல்களிலும் தமிழை கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குறியது. நல்ல கற்பனை.

கீழ்க் கண்ட பதிவில் இந்தப் பாடலை அக்கு வேறு ஆணி வேறாக.... என்னவொறு கலா ரசிகன் இவர்? வாலியே வியந்து போவார் போல ...
http://tamil-blog-india.blogspot.com/2010/01/blog-post_7375.html

திரைப் படம்: சந்த்ரோதயம் (1966)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா


http://asoktamil.opendrive.com/files/Nl8xNjE4Mjc5N19NMHZIUF83MzI4/ChandrOdhayam%20oru%20pen.mp3






சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

குளிர் காற்றுக் கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

குளிர் காற்றுக் கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருள் அல்லவோ

என்னாளும் பிரியாத உறவல்லவோ

இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ

என் கோவில் குடிக் கொண்ட சிலையல்லவோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடலில்லையே

துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே

என் மேனி உனதன்றி எனதில்லையே

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ

மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

கண் ஜாடை கவிச் சொல்ல இசை பாடவோ

இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை


M B ஸ்ரீனிவாசன் தமிழ் திரை உலகினுக்கு வழங்கிய எல்லா பாடல்களுமே இனிமையானது, சுகமானது. அந்த வரிசையில் மோகனக் குரல்கள் பாடும் இந்தப் பாடல்.

திரைப் படம்: எடுப்பார் கைப் பிள்ளை (1975)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், சுபா
இசை: M B ஸ்ரீனிவாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY5NTk5MV9iMml0UV9lMWQ0/ponnum%20mayngum%20-eduppar%20kai%20pillai.mp3






பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்

பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும்
அன்பு விளக்கு

உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும்
சொந்தம் எனக்கு

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும்
அன்பு விளக்கு

உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும்
சொந்தம் எனக்கு

ஒரு புது மாளிகை
அதில் ஒரு மேனகை
தேவனைத் தேடுகின்றாள்

அதிசய மேனகை
இடையினில் மேகலை
ஆடிட வாடுகின்றாள்

ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள்
சந்திக்க ஓடி வந்தேன்

சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள்
சந்திக்க ஓடி வந்தேன்

சாமத்து பூஜையின்
ஆரம்ப தினத்தை
சிந்தித்து தேடி வந்தேன்

சிந்தித்து தேடி வந்தேன்

பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை
தனில் தெய்வம் விளங்கும்

பால் நிலவில்
இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

பால் நிலவில்
இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

பகலோ

ம் ம் ம்

இரவோ

ஹோ ஹோ ஹோ

பகலோ
இரவோ
எதுவோ
அறியோம் பஞ்சணை உறவாட
பஞ்சணை உறவாட

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்

இனிமையான பாடல். S P Bயின் ஆரம்ப காலப் பாடல். இன்று வரை அவரின் இனிமை மாறா குரல் வண்ணம். திருமதி சுசீலா அம்மாவுடன் இணைந்து தேனில் நனைந்த பலாவாக இனிக்கிறது.

நல்ல நடிகையான விஜயலலிதா பின்னர் காபரே நடிகை ஆக்கப் பட்டது நமது துரதிர்ஷ்டமே.


திரைப் படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)
இயக்குனர்: T R ரகுநாத்
நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலலிதா
இசை:  V குமார் என்கிறது விக்கிப்பீடியா
பாடல்: வாலி
குரல்கள் : S P B, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl85OTMxNTg2X1ZoVnNZX2QxNjQ/Ullathil%20Nooru%20ninaithen-%20Mappillai%20Azhaippu.mp3






உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னை தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டுத் தழுவ

கையோடு என்னை அள்ளி
கன்னா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ படாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி

முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

போக போக அத்தனையும் விளங்கி

நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன
என்னை தேடி

பூந்தோட்டம் தன்னைக் கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்தேன் இங்கு
உனைத் தேடி

புத்தகம் போல் பூவை உன்னை புரட்ட

பள்ளியறை பாடங்களை புகட்ட

முக்கனியும் சர்க்கரையும் திகட்ட

முப்பொழுதும் இந்த சுகம் இனிக்க

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னை தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

புதன், 4 செப்டம்பர், 2013

வைகைக் கரை காற்றே நில்லு

அப்போதைய சகலாகலா வல்லவரின் பாடல், படம், இசையில் மனம் உருக வைக்கும் காதல் சோகம் இழையும் பாடல். சரியான குரல் தேர்வு.
அந்தக் காலக் கட்டத்தில் இது போன்ற பாடல்கள் இளைஞர்களை பித்து பிடித்து அலைய வைத்தது.

படம்: உயிருள்ள வரை உஷா
இசை, இயக்கம், பாடல்: டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
நடிப்பு: டி. ராஜேந்தர், நளினி, கங்கா





வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே 
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே 
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு


மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவள் நிலை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே 
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு





திங்கள், 2 செப்டம்பர், 2013

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா

இனிமையானப் பாடல். டி  எம் எஸ், ஜமுனா ராணியுடன் மிக மென்மையாக பாடியிருக்கிறார். அபூர்வமான பாடல்.

திரைப் படம்: எதையும் தாங்கும் இதயம் தவறு தங்க ரத்தினம்
இசை: T R பாப்பா
பாடியவர்: டி  எம் எஸ், ஜமுனா ராணி
எழுதியவர்: ஆத்ம நாதன்?? தெரியவில்லை!

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTk2MjcxNF9Pa1BqbV9mMWU3/Jalamellam%20theriethu%20aaha.mp3





ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

பொய்க் கோபம் கொள்ளுவதும்
ம்
போவென்று தள்ளுவதும்
ஹும்
கைக்கார ஆண்கள் செய்யும்
மெய்க் காதல் சாகசமே

தேடும் போது ஓடுவதும்
ஹும்
ஓடும் போது தேடுவதும்
வாடிக்கையாய் பெண்கள்
நெஞ்சில் வளர்ந்திருக்கும் சாகசமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

கன்னத்தைக் கிள்ளுவதும்
கண்ணாலே கொல்லுவதும்
கன்னியரை மயக்க ஆண்கள்
கைக் கொள்ளும் சாகசமே

கரும்பாக பேசுவதும்
காதல் வலை வீசுவதும்
எறும்பாக ஆணை பெண்கள்
இழுக்கச் செய்யும் சாகசமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் பார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மணம் வீசிடுமே
குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் பார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மணம் வீசிடுமே

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா