பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 7 டிசம்பர், 2012

நான் போகிறேன் மேலே மேலே

எச்சரிக்கை! சமீபத்திய ஒரு "தமிழ்" திரைப் படத்திலிருந்து ஒரு "தமிழ்" பாடல்!!!!!

 புதிய பாடலானலும் இனிமையான S P B, K S சித்ரா குரல்களுக்காக மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல தமிழ் பாடலைக் கொடுத்ததற்கு நன்றி திரு ஜேம்ஸ் வசந்தன்.

திரைப் படம்:நாணயம் (2010)
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
இசை:ஜேம்ஸ் வசந்தன்
இயக்கம்: ஷக்தி S ராஜன்
நடிப்பு: ப்ரசன்னா, ரம்யா ராஜ்
கவிதை வரிகள்: தாமரை

http://www.mediafire.com/download.php?u2q79faclparc1f


  நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து
நேரத்தை நேசிக்கும்

ந ந ந ந ந ந ந ந ந ந ந ந ந நா

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து
நேரத்தை நேசிக்கும்

ல ல லலல்லால ல ல லல்லா ந ந ந ந நா

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி
பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன்
காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும்
காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை
யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அந்நாளும்
இன்று ஹா ஹா

ர ர ர ர ல ல ல ர ர ர ல ல

ம் ம் ம் ம் ந ந ந ந ந ந ந ந ந ந ந ந ந நா

என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி
நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை
நீதான் தந்தாய்

அன்றாட போகும் பாதை
யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன்
பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய்
என்று இங்கேயே
கால் நோக கால் நோக
நின்றேனே

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே

ஆ ஆ ஆ ஆ ஆ
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் வந்து
நேரத்தை நேசிக்கும்

ல ல ல லல்லா ல ல ல லல்லா

ந ந ந ந நா

ல ல ல லல்லா ல ல ல லல்லா

ந ந ந ந நா

ல ல ல லல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக