பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 மே, 2013

பூவே இது பூஜை காலமே

எங்கோ எப்போதோ படித்தது. திரைதுறையை விட்டு விலகி பாடகி ஜென்சி பாட்டு வாத்தியாராக ஏதோ ஒரு கேரளா பள்ளிக் கூடத்தில் இப்போது வேலை பார்ப்பதாக. உண்மையா? அவர்தானா நான் வேறே யாரையாவது பற்றி பேசுகிறேனா?
இவரது பல தமிழ் பாடல்களில் அப்பட்டமாக மலையாள  வாசனை  கொஞ்சம்  தூக்கலாகவே இருக்கும். அப்போதைக்கு பல காரணங்களுக்காக இளையராஜாவுக்கு இவர் தேவைப் பட்டார். கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால் நிலைத்து இருந்திருக்கலாம்.
படத்தில் பாடல் காட்சியும் ஏதோ நாடகம் பார்ப்பது போல உள்ளது. முழுப் படமும் எப்படி இருக்குமோ? எனக்கு படம் பார்த்த ஞாபகம் இல்லை.
பாடலை பொருத்தவரை இளையராஜா  தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார்.


திரைப் படம்: கிராமத்து அத்தியாயம் (1980)
குரல் : ஜேன்ஸி
இசை: இளையராஜா
நடிப்பு: நந்தகுமார், கிருஷ்ண குமாரி
இயக்கம்: ருத்ரய்யா
பாடல் எல்லாமே: கங்கை அமரன் (திரை உலகை இவர்கள் ஆண்ட காலம்)

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY4MTkyOF9XU0ZLUF9iODcw/Poove%20Idhu%20Poojai%20Ka-Gramathu%20Athiyayam.mp3






பூவே இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த
வேகம் தீர்த்த
நாளும் வேண்டுமே
நாளும் உன்னை
நினைத்து நினைத்து
தவித்து தவித்து
ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழை என
வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ
பூவே இது பூஜை காலமே

சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
குயிலே ஏ ஏ ஏ
சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
வாழை மாவிலை மஞ்சள்
வாசல் தோன்றுமோ
பனி வாடை காற்று வீசும்போது
பாவை மேனி வாடுதே
பூவே இது பூஜை காலமே

கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
நெஞ்சே ஏ ஏ ஏ

கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
கண்ணண் ஞாபகம்
உன்னில் நீங்கவில்லையே
திரு மாலை சேர்ந்த தேவி
ஏக்கம் தீர வேண்டி ஏங்குதே
பூவே இது பூஜை காலமே
 இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த
வேகம் தீர்த்த நாளும் வேண்டுமே
நாளும் உன்னை
நினைத்து நினைத்து
தவித்து தவித்து
ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழை என
வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ
பூவே

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொடுத்த தகவல்களுக்கும் பாடல் வரிகளுக்கும் நன்றி சார்..

NAGARAJAN சொன்னது…

ருத்ரையா அவள் அப்படித்தான் என்று படம் இயக்கினார் . தீபாவளி 1978ல் வெளியானது

நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.


அவர் இயக்கிய அடுத்த படம் கிராமத்து அத்தியாயம். 1980ல் வெளியானது. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நானும் என் நண்பர்களும் முதல் நாள் முதல் காட்சிக்குச் சென்றோம். அரங்கு நிறைந்த காட்சி. மிகப் பெரிய ஏமாற்றம். படத்தில் ஒரே நல்ல அம்சம் இளையராஜாவின் பாடல்கள் மட்டுமே. இப்படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை


ருத்ரையாவின் அடுத்த படம் இன்று வரை வரவில்லை

Raashid Ahamed சொன்னது…

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை யுடியூபில் பார்த்தேன், அதோடு முடிவு செய்தேன் இனி ஆடியோ மட்டும் தான் வீடியோ கிடையாது. அந்த அளவுக்கு ஹீரோ ஹீரோயின் லட்சணம். ஆனால் ஒரு சிறப்பு 30 வருடங்களுக்கு முன் கிராமத்தை பார்க்க கண்கொள்ளா காட்சி. இளையராஜா எப்படிப்பட்ட இசை மேதை என்பதற்கு இந்த படத்தின் பாடல்களும் உதாரணம்.

கல்லகம் சுரேஷ் குமார் சொன்னது…

இந்த பாடலை பாடியவர் ஜென்சி இல்ல B.S.சசிரேகா

கருத்துரையிடுக