பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

அன்பர்களே,

ஆச்சிரியமாக வந்த இடத்தில் எனக்கு பாடல்களைத் தறமேற்றும் வசதி கிடைத்தது உபயோகப்படுத்திக் கொண்டேன். வசதி கிடைக்கும் வரை அனுபவிப்போம்...

இதுவும் ஒரு நல்ல பாடல்.

படம்: திருப்பங்கள் (1981)

இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: ஜோஸப் ஆனந்தன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்கனேஷ், படாபட் ஜெயலெக்ஷ்மி
பாடியவர்கள்: S P B, வாணி ஜெயராம்





ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...



காலையிலே தாமரை நீரோடை...

மாலையிலே மந்திரம் போல் மேடை...

காலையிலே தாமரை நீரோடை...

மாலையிலே மந்திரம் போல் மேடை...

கண்களிலே காதல் இளம் ஜாடை...

கலந்து விட்டால் மல்லிகை பூ வாடை...



மோகமென்னும் கவி எழுதும் தேகம்...

மூன்று தமிழ் பாடி வரும் ராகம்...

தேடி உனைக் கண்டுக் கொண்ட யோகம்...

தேவதையில் நீயும் ஒரு பாகம்..



ஆயிரம் காலம் சொல்வேன் ஆலயம் எங்கும் சொல்வேன்...

நீ வந்த நாளே வாழ்வில் நன் நாளாம்...



நன் நாளாம்...



நன் நாளாம்...



ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...



நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...



வள்ளுவரின் இல்லறத்தைக் கேட்டு...

உள்ளமெல்லாம் மின்னியதோர் பாட்டு..

வெள்ளமென ஆசைக் கொண்டேன் நேற்று...

பிள்ளையிடம் பொங்குது தாலாட்டு...

ஆரிரரொ ஆரிரரோ ஆராரிராரோ..

ஆரிரரொ ஆராரிராரோ..

ஆரிரரொ ஆரிரரோ ஆராரிராரோ..

ஆரிரரொ ஆராரிராரோ..



நம்மை விட வாழ்பவர்கள் இல்லை...

நாம் இருக்கும் சொர்க்கம் இதே எல்லை...

தென்றலுடன் சேர்ந்ததம்மா முல்லை...

தினம் தினமும் தேனிலவு கொள்ளை...



நாளைய வாழ்வும் நீயே கோவிலின் தெய்வம் நீயே...

தேடிய செல்வம் நீயே என் தேவி...

என் தேவி...என் தேவி...



ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...



நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு ரெம்ப பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

இப்படியான பாடல்களைக் கேட்பதே அரிதாகி விட்டது, பாடல் தந்த தமிழ் உதயம் அவர்கட்கு நன்றி.

கருத்துரையிடுக