பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

மாலையில் யாரோ மனதோடு பேச....

சுவர்ண லதாவுக்கு அஞ்சலி

ஷத்ரியன் (1990)
நடிப்பு: விஜயகாந்த், ரேவதி.
இசை: இளையராஜா



http://www.divshare.com/download/12554862-74e

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ ஓ ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ ஓ ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ ஓ ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ ஓ ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக