பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 25 மே, 2014

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி

உச்சஸ் தாயிலும் உடனடியாக கீழேயிறங்கியும் பாடலை பிரமாதப் படுத்தியிருக்கும் திருமதி P சுசீலா அம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பாடலின் அர்த்தம் புரிந்து உள்வாங்கி ரொம்பவும் சிரமப்பட்டு இனிமை சேர்த்து பாடியிருக்கிறார். அழகான பாடல் வரிகள்.
காதலன் தன்னை விட்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ஏக்கத்தை குரலிலும் சரி சரோஜாதேவியின் நடிப்பிலும் சரி மிக அருமையாக படம் பிடித்திருக்கிறார்கள்.
இசை மட்டும் இடையினில் பழனி படத்தின் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலை நினைவுப்படுத்துகின்றது.
படகோட்டியில் எந்தப் பாடலும் சோடை போகவில்லை. அனைத்தும் அருமையான பாடல்கள்.

திரைப்படம்: படகோட்டி (1964)
இசை: விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்: பிரகாஷ் ராவ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி









ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய
வந்தாலும் வருவாண்டி
ஹோ ஹோ ஹோய்
போனவன் போனாண்டி

ஹொய்யா ஹொய் ஹொய்யா
என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்
ஹொய்யா ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து
போனவன் போனாண்டி போனவன் போனாண்டி
ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும்
வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோ ஹோ ஹோய்
போனவன் போனாண்டி

என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
ஹொய ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து
போனவன் போனாண்டி ஹோய்
நீரை எடுத்து நெருப்பை அணைக்க
வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்
ஹொய்யா ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆசை மனசுக்கு வாசலை வைத்து
போனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
வாசலை தேடி வாழ்த்துக்கள் பாடி
வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும்
வருவாண்டி ஹோ ஹோ ஹோய்
போனவன் போனாண்டி

ஹொய்-ஹொய்யா ஹொய்யா
 ஹொய்-ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹொய்-ஹொய்யா ஹொய்யா
ஹொய்-ஹொய்யா
 ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதை வருடும் பாடல் ஐயா... நன்றி...

கருத்துரையிடுக