பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு (mayangivitten unnai kandu)

இது போல பாடல் வரிகளுடன் இசையும் குரல்களும் இழைந்து
"நெய்யும் தறியினிலே நூல் இழை போலே" என ஒரு சில பாடல்களை மட்டுமே கேட்க முடியும். இனிமைதான். எம் ஜி யாரின் ஸ்பெஷல் கவனிப்பில்...


திரைப்படம் : அன்னமிட்ட கை (1972)
பாடியவர் : T.M.செளந்தரராஜன், P.சுசீலா
இயற்றியவர் : வாலி
திரையிசை : K.V.மகாதேவன்
இயக்கம்: M கிருஷ்ணன்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
















 மயங்கிவிட்டேன்
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ

மயங்கிவிட்டேன்
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்ல சொல்ல என்ன சுகமோ

எங்கெங்கே என்னென்ன
ஆஹா
இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை
ஆஹா
இங்கே தான்
ஓஹோ
வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

எங்கெங்கே என்னென்ன
இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை இங்கே தான்
வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

நீ எடுக்க நான் கொடுக்க

நாம் எடுத்து கொடுத்த பின்
அடுத்தது நடக்க

மயங்கிவிட்டேன்
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்ல சொல்ல என்ன சுகமோ

எண்ணிக்கொள்
ஆஹா
ஏந்திக்கொள்
ஓஹோ ஹோ
கன்னத்தின் கின்னம் பொங்கி வழியாமல்

கட்டிக்கொள்
ம்
ஒட்டிக்கொள்
ம்
காற்று நம்மிடையில் நுழையாமல்

எண்ணிக்கொள் ஏந்திக்கொள்
கன்னத்தின் கின்னம் பொங்கி வழியாமல்

கட்டிக்கொள் ஒட்டிக்கொள்
காற்று நம்மிடையில் நுழையாமல்

நெய்யும் தறியினிலே

நூல் இழை போலே

நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே
மயங்கிவிட்டோம்

மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக