இளையராஜா மற்றும் எஸ் பி பி, S ஜானகி கூட்டணியில் இனிமையான பாடல்தான். ஆனால் அப்போதைய காலக் கட்டத்தில் பல படங்கள் இது போன்ற விடலைகளை வைத்து எடுக்கப்பட்டு பார்க்கும் விடலைகளையும் ஏக்கமுற வைத்து இப்படி ஆரம்பித்து வைத்தார்கள் நமது இளசுகள் உருப்புடாமல் போக. எஸ் பி பி, S ஜானகி குரல்களும் இவர்களுக்கு set ஆனா மாதிரி தெரியவில்லை. இப்படி நடித்தவர்களும் ஒரு சிலர் தவிர மற்றவர்களும் தேறவில்லை.
திரைப் படம்: ஆனந்தக் கும்மி (1983)
நடிப்பு: பாலச்சந்தர் , அஷ்வினி
பாடியவர்கள்: எஸ் பி பி, S ஜானகி, S P ஷைலஜா (பாடலின் ஆரம்ப வரிகள்- காணொளியில் கேட்கலாம் )
இசை: இளையராஜா
இயக்கம்: பாலகிருஷ்ணன்
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து
ஆடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோய்
பால் போல வா
லாலி லாலி லாலி லாலி லா
லாலி லாலி லாலி
லாலி லல்லாலி லாலி லல்லாலி லா
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லாலி லல்ல லாலி லல்
லா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இதமாய் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோய்
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோ
பால் போல வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே
வா ஓடி வா
நாளை இந்த வேளை
எமை நீ காண வா ஹோ
பால் போல வா
ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள்
கண்டு தான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல்
ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும்
அழியாமல் வாழ்கவே
5 கருத்துகள்:
நல்ல பாடல்தான். ஆனால் இதே போல பல பாடல்கள் இளயராஜாவின் இசையில் இருக்கின்றன. நீங்கள் கூறியுள்ளது போல விடலைகளின் ரசனைக்கான பாடாவதி பாடல்கள் அப்போது ஏகத்துக்கு வந்தன.சரியான கருத்து. இவ்வாறான இசைதான் நம் தமிழிசையை வேறு பாதைக்கு கொண்டுசென்றது.
தங்கள் வருகைக்கு நன்றி காரிகன், நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே.
rare songs விரும்புபவரா?
அரிய பாடல்களை விரும்புபவரா?
ஸ்ரீஸ்ரீ என்ன கேட்க விழைகிறீர்கள் என்பது புரியவில்லை. ஆம் என்பதற்கு எனது பதிவில் நிறைய விளக்கங்கள் உள்ளன. நன்றி.
கருத்துரையிடுக