பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல். நடிகர் மோகனுக்காக கமல் குரல் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. அழகானப் பாடல்.

திரைப் படம்: ஓ மானே மானே (1984)
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: ஜெகன்னாதன்
இசை: இளையராஜா
பாடல்: மூ. மேத்தா
பாடியவர்: கமல் ஹாசன்



http://www.divshare.com/download/15919221-77c

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் பூக்கும் மல்லிகை கொடியினில் தோரணம்
இலக்கனம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும் - அழகே
ரப பப்ப ரப பப்ப

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

உனை நான் பார்க்கிறேன் தேவதை போலவே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
நடந்திடும் காலம் யாவுமே நமதென ஆகுமே
உனக்கென பாடும் பாடலில் உலகமும் ஆடுமே
நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை அடக்கம் தமிழே
ரப பப்ப ரப பப்ப

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
ரிபப றீபப துதுத்து ருருரு

1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

அசோக் சார், என்னிடம் இருப்பதைவிட நீங்கள் தந்திருப்பது சவுண்ட் க்ளாரிட்டி சூப்பராக உள்ளது. ஆரம்ப கால கமலஹாசனின் குரலில் இனிமை ததும்புகிற பாடல். மீண்டும் என் விருப்பப் பாடல் தந்தமைக்கு நன்றி, நன்றி, நன்றி!

கருத்துரையிடுக