பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

கன்னி பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ

நல்ல பாடல்கள் வரிசையில் இந்த பாடலும் ஓரிடம் பிடிக்கிறது. இனிமையான இசையும் குரல்களும் மனதை கிறங்க அடிக்கின்றது.

திரைப் படம்: இந்திரா என் செல்வம் (1962)
இசை: R சுதர்ஸனம்
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி
இயக்கம்: R பத்மனாபன்
நடிப்பு: பாலாஜி, சாவித்திரி



http://www.divshare.com/download/15998441-1be




ம் ம் ம் ம் ம்
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ
தென்றலே கண்டு பொறுப்பாளோ

கன்னிப் பருவம் அவள் மனதில் ஒன்றும் நினைக்கவில்லை
என்று அன்புடன் அங்கு சென்று அவர்க்கு ஆறுதல் சொல் தென்றலே
கன்னி பருவம் அவள் மனதில் ஒன்றும் நினைக்கவில்லை

அத்திப் பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
அத்திப் பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
தித்திக்கும் தேன் தமிழில் குழைத்து தந்தவர் யார் தென்றலே

கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ

நல்லவர் வாழ்க்கையிலே பங்கு கொல்லும் பாவை விளக்கென்றே
நல்லவர் வாழ்க்கையிலே பங்கு கொல்லும் பாவை விளக்கென்றே
நான் உல்லம் கனிந்து சொன்ன
ஆ  ஆ ஆ ஆ
நான் உள்ளம் கனிந்து சொன்ன
உண்மை தனை காணும் இளம் தென்றலே

உன்னை உணர்ந்து கொண்டேன்
தங்கமே உன்னை புரிந்து கொண்டேன்
நான் உன்னை புரிந்து கொண்டேன்

கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
கன்னிப் பருவம் அவள் மனதில் ஒன்றும் நினைக்கவில்லை

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

சிறுவயதில் என் மாமா பெரியப்பாக்கள் முணுத்த பாடல். அருமையான மெட்டு. இத்தனை பழைய பாடலை நினைவில் வைத்து பதிவு செய்கிறீர்களே! நன்றி.

browser மாற்றியதில் உங்கள் இணைப்பைத் தொலைத்துவிட்டேன். நல்லவேளையாக நண்பர் பாலராஜன்கீதா தயவில் மீண்டும் சேர முடிந்தது. தொடர்வேன்.

கருத்துரையிடுக