பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 நவம்பர், 2011

தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே


மறைந்த திரு மலேஷியா வாசுதேவன் குரலுடன்  S ஜானகி அம்மா  இணைந்து கலக்கி இருக்கும் பாடல். இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒரு மைல்கல் எனலாம். தாளம் போட வைக்கிறது.

திரைப் படம்: அதிசயப் பிறவி (1990)
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வாலி
நடிப்பு: ரஜினி, கனகா



http://www.divshare.com/download/16033056-f20




http://www.divshare.com/download/16033022-d8b


தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் அந்த வான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதும்மா

சொந்ததில் தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி
கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே

மானாக பொன்னுக சிக்கும் மச்சின கைராசி
அத நான் பாத்தேன் கண்ணுல சிக்கி அப்படி உன் ராசி
சிருவாணி கெண்டையப்போல மின்னுது கண்ராசி
நீ சிரிச்சாக்க சில்லரை கொட்டும் உத்தமி உன் ராசி
நான் வாங்கிடும் உள் மூச்சிலே, நீ சேரவே
சூடாச்சுதே
வஞ்சி மனம் பூத்தாட, கெஞ்சி தினம் கூத்தாட
ஒன்னுக்குள்ளே ஒன்னு வந்து உன் உயிரோட ஒட்டுதய்யா

தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் அந்த வான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதும்மா

சொந்ததில் தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி
கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே

அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு பாடுர என் பாட்டும்
தேரோடும் தென்மதுரை சன்னிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின் சந்ததி வந்தவனோ
உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே
எனக்கேனம்மா
நெஞ்சத்திலே நீ ஆள, மஞ்சத்திலே நான் ஆள
காதலென்னும் ஆட்சிதனை வானமும் கூட வாழ்த்துதம்மா

தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் அந்த வான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதும்மா

சொந்ததில் தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி
கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே

2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

மலேசியா வாசுதேவன் என்றொரு மகத்தான பாடகர் பாடியது. இவருக்கு சமமாக பாட ஜானகி அம்மா தான் சிறந்த பாடகி.

TSK சொன்னது…

பாடலாசிரியர்: பிறைசூடன்

கருத்துரையிடுக