பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ ஆ ஆ ஆ ஆ


பெரிய பெரிய இசையமைப்பாளர்கள் கூட இந்த வரிசைக்கு வர பல காலம் பிடிக்கும். அவ்வளவு இனிமை இசையும் பாடலும். இங்கே மீண்டும் T ராஜேந்தர் மின்னுகிறார்.

திரைப் படம்: பூக்களைப் பறிக்காதீர்கள் (1986)
குரல்கள்: S P B, சித்ரா
இசை: T ராஜேந்தர்
பாடல்:T  ராஜேந்தர்
நடிப்பு: சுரேஷ், நதியா
இயக்கம்: V அழகப்பன்




http://www.divshare.com/download/16472513-87b



http://www.divshare.com/download/16471952-121

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ
சுகம் சுகம் ஆ ஆ ஆ ஆ ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட
இதம் இதம் ஓ ஓ ஓ

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் எங்கே

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ
சுகம் சுகம் ஆ ஆ ஆ ஆ ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட
இதம் இதம் ஆ ஆ ஆ

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழி என்னும் அருவியில் நனைகிறேன் குளிர்கிறேன்
கவி என்னும் நதியிலே குதிக்கிறேன் குளிக்கிறேன்
மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவல்கிறேன்
வாழை இலை போல நீ ஜொலிக்கிறாய்
காலை விருந்துக்கு என்னை அழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னை பறிக்குதா
புத்தகம் போல் தமிழில் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே
த த த தா த த து து தூ
கன்னி மாதுளம் இங்கே
த த த தா த த து தூ

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ
சுகம் சுகம் ஆ ஆ ஆ ஆ ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட
இதம் இதம் ஓ ஓ ஓ

காதல் ஊர்வலம் இங்கே
ட ட ட ட்டா ட டட்ட
கன்னி மாதுளம் இங்கே
ல ல ல ல லல ரு ரு ரூ

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இனிமை அருமை குளுமை பகிரிவிற்க்கு நன்றி. அனவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நான் என் இதயப் பொக்கிஷத்தில் மிகப் பத்திரமாகப்
பூட்டி வைத்திருக்கும் பாடல் இது.
பகிர்விற்கு நன்றி.

கருத்துரையிடுக