பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 19 ஜூன், 2011

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

படு வேகமான கர்னாடக இசையுடன் சுசீலா அம்மாவின் குரலும் இணைந்ததால் வரும் சுகமான பாடலிது.


திரைப் படம்: பஞ்ச வர்ணக் கிளி (1965)
இயக்கம்: K ஷங்கர்
தயாரிப்பு: சின்னதம்பி
நடிப்பு: ஜெய்சங்கர், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி




Play Music - Share Audio - Alagan muruganidam Panchavar...






சத்தியம் சிவம் சுந்தரம்...ஆ ஆ...

சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ ஆ ஆ ஆ

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

அன்னல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் .
அன்னல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ ஆ..

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே,
பழமுதிர்ச்சோலையிலே ஆ ஆ ஆ ஆ
பனி பெய்யும் மாலையிலே,
பழமுதிர்ச்சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே,
கன்னி மனம் கொய்துவிட்டான்
கனி கொய்யும் வேளையிலே,
கன்னி மனம் கொய்துவிட்டான்

பன்னிரெண்டு கண்ணழகை
பார்த்திருந்த பெண்ணழகை
பன்னிரெண்டு கண்ணழகை
பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல் தான் ஆள வந்தான்,
பெண்மையை வாழவைத்தான்
பெண்மையை வாழவைத்தான், ஆ ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலைமேல் இருப்பவனோ,
மயில் மேல் வருபவனோ
மலைமேல் இருப்பவனோ,
மயில் மேல் வருபவனோ
மெய்யுருக பாட வந்தால்,
தன்னைத்தான் தருபவனோ
மெய்யுருக பாட வந்தால்,
தன்னைத்தான் தருபவனோ
அலைமேல் துரும்பானேன்,
அனல் மேல் மெழுகானேன்
அலைமேல் துரும்பானேன்,
அனல் மேல் மெழுகானேன்

அய்யன் கை தொட்டவுடன்
அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன், ஆ ஆ ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

2 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

ஆஹா
ஒரு நல்லா தெய்வீகப் பாடலை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே
இந்த பாட்டில் சுசீலா அம்மாவின் குறள் தேனாய் இழைந்தோடுகிறது

மதுரை சரவணன் சொன்னது…

arumaiyaana paatal... pakirvukku vaalththukkal

கருத்துரையிடுக