பின்பற்றுபவர்கள்

புதன், 1 ஜூன், 2011

கண்களின் வெண்ணிலவே-உல்லாச காதல் தரும் மதுவே

அழகான பாடல். பாடல் முழுவதும் ஆண் குரல் உச்சஸ்தாயிலும் பெண் குரல் மத்தியஸ்தாயிலும் பாடியிருகிறார்கள். இறுதியில் இருவரும் இணைந்து பாடலை முடித்திருக்கும் விதம் அருமையாக இசையமைத்து இருக்கிறார் G R.


திரைப் படம்: மணிமேகலை (1959)
இசை: G ராமனாதன்
இயக்கம்: V S ராகவன்
பாடும் குரல்கள்: நடிப்பு: T R மகாலிங்கம், பானுமதி
 

 
http://www.divshare.com/download/14955944-717
 
கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இளமையின் தேன் அலையே
விண் மீது ஒளி தரும் தாரகையே
மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இளமையின் தேன் அலையே
விண் மீது ஒளி தரும் தாரகையே
மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

வெண் மலர் மேல் பனியே
அன்பாக சொல்வது நம் கதையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
வெண் மலர் மேல் பனியே
அன்பாக சொல்வது நம் கதையே
பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

காவிரி ஆழ் கடல் போல்
கண் காணா காற்றொடு மென் குளிர் போல்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
காவிரி ஆழ் கடல் போல்
கண் காணா காற்றொடு மென் குளிர் போல்
ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

என்னுயிர் மாமணியே இப்பாரில்
யாருமில்லை தனியே மெய்க் காதல்
கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இன் செயும் கார் முகிலே
ஒன்றாக கொஞ்சுதல் உன் எழிலே
தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

டிஆர் மகாலிங்கம் ஒரு சிறந்த இசை மேதை. இவருடைய குரலும் கம்பீரம். உச்சஸ்தாயியில் பாடும் போது கொஞ்சமும் பிசிர் தட்டாத குரல்.

கருத்துரையிடுக