பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...


வாணி ஜெயராமின் கணீர் குரலும் ஸ்ரீகாந்தின் மேன்மை குரலும் அவரது அழகான இசையமைப்பில் நல்ல தமிழிலில் அருமையாக அமைந்துள்ளது இந்த பாடல்.   


படம்: நினைப்பது நிறைவேறும்

குரல்கள்: M.L ஸ்ரீகாந்த்,   வாணி  ஜெயராம்

இசை: M.L.ஸ்ரீகாந்த்

பாடல்: மணி  



http://www.divshare.com/download/14177033-8cb
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...


நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு...

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..



நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..

மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..

மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..



நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

3 கருத்துகள்:

தமிழன்பன் சொன்னது…

இந்தப் பாடலை இன்றுதான் முதன் முதலாகக் கேட்கின்றேன்.
அருமையான தெரிவு.

தமிழன்பன் சொன்னது…

புனை பெயர்தான் கிணத்துத் தவளை,
ஆனால் தமிழ் திரைப்படப் பாடல்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள்.
தங்களிடம் மேலும் ஒரு யாசகம்...
1976ம் ஆண்டில்
A.ஜெகநாதனின் இயக்கத்தில் வெளிவந்த
அதிஸ்டம் அழைக்கிறது என்னும் திரைப்படத்தில்
கவிஞர் வாலி வரிகளுக்கு T.M.சௌந்தராஜன் குரல் கொடுக்க
என் மனதைக் கவர்ந்த பாடலான
அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது...
என்று தொடங்கும் பாடலை தரவேற்றுவீர்களா???

Raashid Ahamed சொன்னது…

ஸ்ரீ காந்தின் குரலும் கேட்க இனிமையான குரல். இந்த பாடலும் இப்போதும் கேட்கும் படியாக உள்ளது.ஸ்ரீ காந்த் பாடிய இன்னொரு பாடலான “எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி தென்றல் கவி பாடும் இன்ப ஆட்சி” என்ற பாடலையும் தருவீர்களா ?

கருத்துரையிடுக