பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 20 மார்ச், 2011

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு..பருவம் பதினெட்டு..

மனைவி தரப் போகும் மழலைக்காக கணவன் பாடும் இந்த இனிமையான பாட்டு மனதுக்கு இதமானது. எந்த கவலையையும் மறக்கச் செய்யும் கவிதை வரிகள், குரல் மற்றும் இசை.


திரைப் படம்: இவள் ஒரு சீதை (1978)

இசை: V குமார்

நடிப்பு: விஜயகுமார், சுமித்திரா

இயக்கம்: A ஜெகனாதன்



http://www.divshare.com/download/13571687-0e6







பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..

அவள் பழமுதிர் சோலையில்

தாமரை போலே..

மலர்ந்தது ஒரு மொட்டு..

மலர்ந்தது ஒரு மொட்டு...

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..



எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை..

சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்..

கண்ணன் வருகிறான்

என் மன்னன் வருகிறான்..

புல்லாங்குழலின் ஓசையடி ..

பூமெத்தை தென்றலின் வாசமடி.

அம்மா என்கிறான்

கையை அசைக்கிறான்..

அம்மா என்கிறான்

கையை அசைக்கிறான்..



பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..

அவள் பழமுதிர் சோலையில்

தாமரை போலே..

மலர்ந்தது ஒரு மொட்டு

மலர்ந்தது ஒரு மொட்டு ..

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..



ஒன்பது மாசம் போனது கண்ணே..

ஒரு மாதத்தில் வருவான் கண்ணன்..

கனவே பலித்தது

என் நினைவே ஜெயித்தது..

அங்கே எனது வெள்ளி நிலா ..

ஆண்மை சொல்லும் பிள்ளை நிலா..

சீதை தருகிறாள்

ராமன் பெறுகிறான்..

சீதை தருகிறாள்

ராமன் பெறுகிறான்..



பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.



2 கருத்துகள்:

கருத்துரையிடுக