பின்பற்றுபவர்கள்

புதன், 17 நவம்பர், 2010

எங்கெங்கும் அவள் முகம்..அங்கெல்லாம் என் மனம்...

மிகச் சாதாரணமான இசையில் இழையோடும் தமிழ்க் கவிதை. SIMPLY SUPERB


படம்:   நெருப்பிலே பூத்த மலர் (1981)
இயக்கம்: கௌவ்சிக்
நடிப்பு: சிவகுமார், பூர்ணிமா தேவி
இசை: K V மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயசந்திரன்
  


http://www.divshare.com/download/13213249-f97







எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

எங்கெங்கும் அவள் முகம்..



எத்தனை ஆனந்தக் கிளர்ச்சி..

என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி...

எத்தனை ஆனந்தக் கிளர்ச்சி..

என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி...

அத்தனை தேவதைக் கவர்ச்சி...

அத்தனை தேவதைக் கவர்ச்சி...

அவள் அசைவது தாமரை மலர்ச்சி...

நீல நிறம் கொண்ட ஆடை..

அதில் மீறிய புது மலர் வாடை...

ஆலிலை போலொரு ஜாடை...

அது ஆனந்த நாட்டிய மேடை...



எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

எங்கெங்கும் அவள் முகம்..



ஆனிப் பொன் மேனியை படைத்து...

அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து..

ஆனிப் பொன் மேனியை படைத்து...

அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து..

மாணிக்க புன்னகைக் கொடுத்து...

மாணிக்க புன்னகைக் கொடுத்து...

அவள் மலர்ந்து விட்டாள் என்னை நினைத்து...

அவள் மெல்லிய பாதங்கள் மிதித்தாள்...

என் மேனிக்கு ஆனந்தம் என்பேன்...

மல்லிகை மலர்ந்தது மண்ணில்...

அதன் வாசனை நடந்தது விண்ணில்...



எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக