பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

அழகான பாடல். தாயாகப் போகும் ஒரு பெண் தன் கணவனையும் தாலாட்டுகிறாள்

திரைப் படம்: தூண்டில் மீன் (1977)
இசை:  V குமார்
இயக்கம்: Ra சங்கரன்
நடிப்பு: லக்ஷ்மி, மோகன்
குரல்கள்: .S P B, P சுசீலா





http://www.divshare.com/download/13236349-890




வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...



வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...



என் அங்கமே உன்னிடம் சங்கமம்...



என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்..



என் அங்கமே உன்னிடம் சங்கமம்...



என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்..

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...



வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...



தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று...

தேவி வடிவாக கண்டேன் இன்று...

தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று...

தேவி வடிவாக கண்டேன் இன்று...



பூவிதழ் தன்னைப் பறித்து...

பூஜையை மெல்ல நடத்து...

பூவிதழ் தன்னைப் பறித்து...

பூஜையை மெல்ல நடத்து...

தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து...

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...



வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...



நான் அறியாத ரகசியம் ஒன்று...

நூலிடைப் பார்த்தேன் தெரிந்தது இன்று...

நான் அறியாத ரகசியம் ஒன்று...

நூலிடைப் பார்த்தேன் தெரிந்தது இன்று...



தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயானபோதும்...

ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயானபோதும்...



மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும்...

மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும்...

மயக்கம் கொடுக்கும் மலரணை அதுவல்லவா

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...



வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

வண்ணக் கொடித் தந்த முல்லைச் செண்டு...

வந்து விளையாடும் பிள்ளை என்று...

வண்ணக் கொடித் தந்த முல்லைச் செண்டு...

வந்து விளையாடும் பிள்ளை என்று...



மோகன ராகம் படித்து...

மூவரும் கைகள் இணைத்து...

மோகன ராகம் படித்து...

மூவரும் கைகள் இணைத்து...

நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து...



வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...



வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

அற்புதமான பாடல் சார்.

கருத்துரையிடுக