பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 18 ஜூன், 2010

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

தன் காதலியை மிக முறையாக வர்ணித்து பாடும் பாடல்.



திரைப் படம்:   நிமிர்ந்து நில் (1968)

பாடியவர்: TMS

இசை: M S விஸ்வனாதன்

இயக்கம்: தேவன்

நடிப்பு: ரவிசசந்திரன், பாரதி









இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

அவன் எழுதி வைத்த பாடல் அது பெண்மை என்பது....

ஆ ஆ ஆ ஆ

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

ஓடும் நதியின் நடையழகோடு...ஒடியும் கொடியின் இடையழகோடு....

பாடும் குயிலின் மொழியழகோடு...

பாடும் குயிலின் மொழியழகோடு...

பால் நிலவென்னும் விழியழகோடு...

பால் நிலவென்னும் விழியழகோடு...

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

காலடியோசை தாளம் என்றாக கைவளையோசை மெல்லிசையாக...

பூமகள் பெயரே பாவமென்றாக...

பூமகள் பெயரே பாவமென்றாக...

பார்த்தும் இங்கே காதல் உண்டாக...

பார்த்தும் இங்கே காதல் உண்டாக...

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

குங்கும இதழில் குறு நகை வழிய...

கூந்தல் நடுவே பூச்சறம் நெளிய...

ஓவிய முகமே காவியம் பொழிய...

ஓவிய முகமே காவியம் பொழிய...

புண்ணியம் செய்தேன் நான் உன்னை அடைய...

புண்ணியம் செய்தேன் நான் உன்னை அடைய...

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக