பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2010

இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா

மற்றுமொரு அமைதியான அழகான பாடல்.


பாடியவர்கள்: சுசீலா & TMS

திரைப் படம்: சித்ராங்கி

இசை: வேதா



http://www.divshare.com/download/11827151-4bb




இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா...

தொன்று பல ஜன்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே...



இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா...

தொன்று பல ஜன்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே...

இன்று வந்த சொந்தமா..



வெண்ணையை அள்ளி உண்டு வேண்குழல் ஊதி நின்று கன்னனாக நீ இருந்த காலத்திலே...



என்னையே கொள்ளைக் கொண்ட புன்னகை வீசி நின்ற கன்னிகை ராதையாக தேடி வந்தாய்...



குயில் இசையும் குழல் இசையும் குழைந்திடும் வேளையிலே..



அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியது...



இன்று வந்த சொந்தமா..



இடையில் வந்த பந்தமா...



தொன்று பல ஜன்மமாய்



தொடர்ந்து வரும் இன்பமே...

இன்று வந்த சொந்தமா..



கணையாழி கையில் தந்து..துஷ்யந்தனாக வந்து...காதல் மணம் புரிந்த காலத்திலே...



மானோடு நீ வளர்ந்து... சகுந்தலையாயிருந்து...மாறாத அன்புக் கொண்டு மாலை இட்டாய்..



குளிர் நிலவும்...மலர் மணமும்...உலாவிடும் சோலையிலே..



அன்பில் மிதந்து.. தன்னை மறந்து..அகம் மகிழ்ந்தாடியது...

இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா...

தொன்று பல ஜன்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே...

இன்று வந்த சொந்தமா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக